Skip to main content

நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிந்ததா? – உச்சநீதிமன்றம் கேள்வி

 புதுடெல்லி: நீட் தேர்வு நாடு முழுவதும் கசிந்ததா என்பது குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி 571 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 4,750 தேர்வு மையங்களில், மற்றும் வெளிநாடுகளில் 14 நகரங்களில் நடைபெற்றது. இத் தேர்வை 23.33 லட்சம் மாணவர்கள் எழுதியனர்.

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. இதனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மறு தேர்வு நடத்த வேண்டும், நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 40க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில், சனிக்கிழமைக்குள் (நேற்று முன்தினம்) நீட் தேர்வு முடிவுகளை தேர்வு மையம் மற்றும் நகர வாரியாக வெளியிட வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமைக்கு (என்டிஏ) உத்தரவிட்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வழக்கை திங்கள்கிழமைக்கு (இன்று) ஒத்திவைத்தார். அதன்படி, சனிக்கிழமை தேர்வு முடிவுகளை என்டிஏ வெளியிட்டது.

இன்று காலை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியபோது, மனுதாரர் தரப்பில், 'நீட் வினாத்தாள் ஏப்ரல் 24ம் தேதி அனுப்பப்பட்ட நிலையில், மே 3ம் தேதி தான் வங்கி லாக்கரில் பாதுகாக்கப்பட்டது. அதுவரை தனியார் அமைப்பின் கைகளில்தான் வினாத்தாள் இருந்தது. முக்கிய குற்றவாளி சஞ்சீவ் முகிஜியா மற்றும் அவரது கூட்டாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை' என்று வாதம் முன்வைக்கப்பட்டது.

இதற்கிடையில், தலைமை நீதிபதி சந்திரசூட், 'பாட்னா, ஹசாரிபாக் ஆகிய 2 மையங்களில் நீட் வினாத்தாள் கசிவு உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்' என்று தெரிவித்தார். தொடர்ந்து, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் மனுதாரர்கள் மற்றும் அரசுத் தரப்பு வாதங்கள் நடைபெற்று வருகின்றன.

Comments

Popular posts from this blog

கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்ய 31ம் தேதிக்குள் விண்ணப

  கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர் தேர்ந்தெடுத்தல் குறித்து மாற்றுத்திறனாளிகள் நல சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பங்கேற்பு மற்றும் குரல்கள் ஒலிப்பதற்காக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுடைய பங்கினை அளிப்பதற்காகவும், சமூக நீதியினை அனைத்து மக்களுடன் கூடிய பங்களிப்பினை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்வதற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி நிகழ்வில் டி.கே. சிவகுமாரின் பெயரை உச்சரிக்காமல் தவிர்த்த சித்தராமையா

  கர்நாடக முதல்வர் சித்தராமையா சனிக்கிழமை மைசூரில் நடந்த ஒரு கட்சி நிகழ்ச்சியில் தனது உரையில் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பெயரைக் குறிப்பிடவில்லை, ஆனால் அவர் இல்லை. சிவகுமாரின் பெயரைக் குறிப்பிட நினைவூட்டியதற்காக ஒரு காங்கிரஸ் தலைவரை அவர் பகிரங்கமாகக் கண்டித்தார். "டி.கே. சிவகுமார் பெங்களூருவில் இருக்கிறார், மேடையில் இல்லை. இங்கு இருப்பவர்களை மட்டுமே நாங்கள் வரவேற்கிறோம்" என்று அவர் கூறினார்.

வீட்டின் மேற்கூரையில் பாய்ந்த கார் – 6 பேர் படுகாயம்

ஜெர்மனியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தின் மீது மோதி, தரையிலிருந்து 3 மீ உயரத்தில் பறந்து சாலையோரம் இருந்த வீட்டின் மேற்கூரையில் பாய்ந்த காரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது